பொழுதுபோக்கு

‘SK 21’ டைட்டில் கமல் பட பாட்டா இருக்கே… சம்பவம் இருக்கு போல

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசன் படத்தை தயாரித்துவருகிறார்

பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார் சிவர்கார்த்திகேயன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் போன படம் மிஸ் ஆனது போல் இந்தப் படம் மிஸ் ஆகாது என்று கூறியிருந்தார்.

மாவீரன் படத்தின் ரிசல்ட்டை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சொன்னது மாதிரியே செய்துவிட்டார் என்று உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். அடுத்ததாக வெளியான அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

அவர் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படமானது ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில காட்சிகளை ஷூட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் யாரும் ஃபோன் யூஸ் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதன்படி படத்துக்கு போர்கண்ட சிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போர்கண்ட சிங்கம் என்பது கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் வரும் பாடல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 29 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்