தென் அமெரிக்கா

1.3 டன் சுறா துடுப்புகளை பறிமுதல் செய்த பெருவியன் பொலிஸார்

பெருவில் ஏறத்தாழ 1.3 டன் சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோதமாகப் பெறப்படும் இந்தச் சுறா துடுப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

சீனா, ஜப்பான் போன்ற சில ஆசிய நாடுகளில் சுறா துடுப்புகளால் தயாரிக்கப்படும் உணவுவகைகளை விரும்பி சாப்பிடும் பலர் உள்ளனர்.இதன் காரணமாக சுறாக்கள் அவற்றின் துடுப்புகளுக்காகவே பேரளவில் பிடிக்கப்படுகின்றன.

துடுப்புகளை வெட்டி எடுத்துக்கொண்டு படுகாயம் அடைந்த சுறாக்கள் மீண்டும் கடலில் வீசப்படுகின்றன.இதனால் பல சுறாக்கள் மடிந்துவிட்டன.இதே நிலை நீடித்தால் சுறாக்கள் அறவே இல்லாமல் போகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இத்தகைய சட்டவிரோத செயல்களைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதிலும் இந்தக் கொடுஞ்செயல் தொடர்கிறது.

பெருவில் பறிமுதல் செய்யப்பட்ட ஏறத்தாழ 1.3 டன் சுறா துடுப்புகள் சரக்குக் கிடங்கு ஒன்றில் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.அங்கிருந்து அவை ஆசிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து பெரு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

(Visited 40 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த