இலங்கை

இலங்கை பணிப்பெண்ணின் மரணத்தில் மர்மம் – கீதாகுமாரசிங்க

குவைத்தில் பணி புரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தொடர்பில் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் விசாரணை நடாத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான கீதாகுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது தூதுவருடன் அலைபேசியில் உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிரிழந்த குறித்த பெண் 7 வருடங்களாக குவைத்தில் பணி புரிந்து வந்ததாகவும் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கேள்வியெழுப்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரிடம் தெரிவித்த இலங்கைத் தூதுவர், இது தொடர்பான விரிவான அறிக்கை பிரதமர் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!