சனத்தொகை கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஒதுங்கி இருப்போம் : கிராமசேவையாளர்கள் அறிவிப்பு!

தமக்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படும் வரை சனத்தொகை கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலகி இருப்போம் என அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், கொடுப்பனவுகள் வழங்குவதில் அதிகாரிகளும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையும் தன்னிச்சையாகச் செயற்படுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெகத் சந்திரலால் குற்றம் சாட்டியுள்ளார்.
சனத்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படைக் கட்டமான வரைபடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)