இந்தியா செய்தி

பதவியை ராஜினாமா செய்ய உள்ள இந்திய எதிர்க்கட்சி தலைவர் கெஜ்ரிவால்

‘இன்னும் இரண்டு நாள்களில் எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்’ என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைத்தது.

இந்த நிலையில் அவர் , “இரண்டு நாள்களில் என்னுடைய முதலமைச்சர் பதிவியை ராஜினாமா செய்யப்போகிறேன். இன்னும் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. மக்களின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ளாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன்” தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் எனக்கான நியாயம் கிடைத்துவிட்டது. இப்போது மக்கள் மன்றத்திலும் எனக்கான நீதி கிடைக்கும். மக்களின் தீர்ப்பிற்கு பிறகு தான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன். கெஜ்ரிவால் ‘குற்றவாளியா, நிரபராதியா?’ என்பதை மக்களிடன் கேட்க விரும்புகிறேன். நான் நிரபராதியாக இருந்தால் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் கைதானதால் ராஜினாமா செய்யவில்லை. ஜனநாயகத்தை காக்க ராஜினாமா செய்கிறேன். நரேந்திர மோடி பிரிட்டிஷ் ஆட்சியை விட சர்வதிகாரமாக நடந்துக்கொள்கிறார். என்னை மட்டுமல்ல, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் வழக்குப் பதிந்துள்ளனர். அவர்கள் வழக்கு பதிந்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்பதில்லை. இது அவர்களது புதிய விளையாட்டு” என்றும் பேசியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content