பொழுதுபோக்கு

அமைதியை வேண்டி நிறைய பிரார்த்தனைகள் செய்தேன்: சமந்தா உருக்கம்

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

 

யசோதா படத்தின் புரொமோஷன் பணிகளில் கலந்து கொண்ட சமந்தா ஒரு நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன்பின்னர் அதிலிருந்து தான் மீண்டு வருவதாக தெரிவித்து, தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுப்பட்டார். தற்போது குஷி மற்றும் சிட்டாடல் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

இந்நிலையில் சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளதை உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நிறைய பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தேன். ஆசிர்வாதங்களையும், பரிசுகளையும் கேட்டு அல்ல, வலிமையையும், அமைதியையும் கொடுக்க வேண்டினேன். எதுவும் நாம் நினைத்தது போல் நடக்காது என்பதை இந்த ஒரு வருட காலம் எனக்கு உணர்த்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

(Visited 21 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!