இந்த நாடு எப்போதோ முன்னேற்றம் அடைந்திருக்கும் : வரிவிதிப்பு தொடர்பில் சிறிதரன் குற்றச்சாட்டு!
வரி விதிப்பு ஊடாக நாடு முன்னேற்றமடையும் என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேற்றமடைந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி ஒத்துழைப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடும் நிலை […]













