செய்தி தமிழ்நாடு

பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்றார்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை 11-04-23 செய்தியாளர் சீனிவாசன் பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி ஆசிரியர் பயிற்சி  முடித்துள்ளார். இவர் காளப்பட்டி பகுதியில் உள்ள சாஸ்தா பில்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் மூன்று மாதமாக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இந்நிறுவனத்தின்  உரிமையாளர் கார்த்திக் காயத்ரியிடம் அத்து மீறி பேசுவது,என வேண்டுமென்றே வேலைப்பளுவை அதிகரித்தும் கொடுத்துள்ளார். மேலும்  போன் மூலமாக அதிகப்படியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய படையெடுப்பால் 262 உக்ரைன் விளையாட்டு வீரர்கள் பலி

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக 262 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் விளையாட்டு அமைச்சர் வாடிம் ஹட்சைட் தெரிவித்துள்ளார். படையெடுப்பு காரணமாக உக்ரைனில் உள்ள மைதானங்கள் உட்பட 363 மைதானங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனத்தின் தலைவருடனான சந்திப்பில், ரஷ்யாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரரும் ஒலிம்பிக் அல்லது பிற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படக்கூடாது என்று உக்ரைன் விளையாட்டு அமைச்சர் கூறினார். அவர்கள் அனைவரும் இந்த போரை ஆதரிக்கிறார்கள் […]

செய்தி தமிழ்நாடு

30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும்

  • April 15, 2023
  • 0 Comments

30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதியளவில் பாதிக்கப்படும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு உலகம் முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக அளவில் கர்ப்பக புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக பரவிய பிறகு நோய் கண்டறிந்து சிகிச்சைக்காக வருபவர்களை அதிகமாக இருப்பதால். அவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவது அரிதாக உள்ளது. ஆகையால் இந்த வகை புற்றுநோயை […]

ஐரோப்பா செய்தி

தலிபான்களால் மூன்று பிரித்தானியர்கள் கைது

  • April 15, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் மூன்று பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் இருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது, மற்றைய நபர் எவ்வளவு காலமாக தலிபான்களின் காவலில் இருந்தார் என்பது வெளியிடப்படவில்லை. பிரித்தானிய தூதரக சேவைகள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பா செய்தி

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ருவாண்டா பாதுகாப்பானது – பிரித்தானிய உள்துறை அமைச்சர்

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், புகலிடக் கோரிக்கையாளர்களை மீள்குடியேற்றுவதற்கு ருவாண்டா ஒரு பாதுகாப்பான நாடு என்று தான் நம்புவதாகக் கூறுகிறார், ஆனால் அங்கு முதல் நாடுகடத்தலுக்கு எந்த காலக்கெடுவையும் நிர்ணயம் செய்ய மறுத்துவிட்டார். பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுப்பதற்காக 120 மில்லியன் பவுண்டுகள் ($148 மில்லியன்) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 6,500 கிமீ (4,000 மைல்கள்) தொலைவில் உள்ள ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்ப பிரிட்டிஷ் அரசாங்கம் நம்புகிறது. […]

ஐரோப்பா செய்தி

கிரிமியாவை மீட்டெடுத்தால் ரஷ்யாவுக்கான பாலத்தை அதற்றுவோம் – உக்ரைன் சூளுறை!

  • April 15, 2023
  • 0 Comments

கிரிமியாவை மீட்டெடுத்தால் ரஷ்யாவுக்கான 12 மைல் பாலத்தை அகற்றும் என உக்ரைன் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைனின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் கூறினார். இந்நிலையில் டானிலோவின் கருத்துக்கு பதிலளித்த ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட செவாஸ்டோபோல் தலைவர் மிகைல் ரஸ்வோஜாயேவ், நோய்வாய்ப்பட்டவர்களின் கருத்துக்களை தீவிரமாக நடத்துவது தவறானது எனக் கூறினார். கிரிமியா பாலம் ஐரோப்பாவின் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. ஒக்டோபரில் நடைபெற்ற டிரக் குண்டுத்தாக்குதலின் மூலமாக குறித்த பாலம் சேதமடைந்திருந்தமை […]

ஐரோப்பா செய்தி

போரில் தாக்குதல் உத்திகளை மாற்றிய ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

தெற்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா வழமையான தாக்குதல் உத்திகளை மாற்றியுள்ளதாக தெற்கு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. உக்ரைன் துப்பாக்கிச்சூடு நிலைகளின் 30 கிமீ பட்டையை அழிக்கும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது வான்வழித் தாக்குதல்களுக்கான நகர்வைத் தூண்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எஸ்யு-35 விமானங்கள் இலக்குகளை அழிக்கும் அளவுக்கு நெருக்கமாக பறந்ததாக கூறப்படுகிறது. இது பயங்கரவாதத்தின் செயல்முறை என தெற்கு பகுதிக்கான செய்தித் தொடர்பாளர் நடால்யா விமர்சித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

ரிஷி சுனக்கின் ஒரு வார விமான பயணத்திற்கு 5.07 கோடி செலவு; எதிர்க்கட்சியினர் கண்டனம்

  • April 15, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டில் அவர், ஒரு வாரத்தில் மேற்கொண்ட விமான பயணத்திற்கு ரூ.5.07 கோடி வரை செலவாகி உள்ளது என தெரிய வந்து உள்ளது. அவர் தனியார் ஜெட் விமானத்தில் பயணித்ததில், மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரதமர்களில் பெரிய பணக்காரராக திகழும் சுனக்கிற்கு, இந்த செலவால் எதிர்க்கட்சிகளின் […]

ஐரோப்பா செய்தி

கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்டியன்டினிவ்காவில் நடத்தப்பட்ட செஷ் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரி தெரிவித்துள்ளார். சுமார் 70000 மக்கள் வசிக்கும் குறித்த நகரமானது தற்போது சண்டை அதிகளவில் நடைபெறும் மையப் பகுதியாக மாறியுள்ளது. இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 12.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இதேவேளை  உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடங்கி ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா செய்தி

போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 75 ஆயிரத்தை நெருங்குவதாக உக்ரைன் அறிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்ய போரில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 75 ஆயிரத்தை நெருங்குவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 560 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ரஷ்யாவால் கூறப்பட்டதை விட அதிகமாக உள்ளது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விவரங்களை சரிபார்க்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!