இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இணக்கம்!
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. […]













