இலங்கை கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் எந்த பாடசாலைகளிலும் வெளி தரப்பினர் நுழைய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 472,553 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு […]













