ஐரோப்பா

F16 விமானங்களை கோரும் உக்ரைன் : பயிற்சிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை!

  • June 16, 2023
  • 0 Comments

நெதர்லாந்து மற்றும் டென்மார்க் தலைமையிலான போர் விமானப் பயிற்சித் திட்டம், இந்த கோடையில் ஆரம்பமாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் இணைவதற்காக உக்ரைன் சார்பில் பல விமானிகள் அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  உக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட்”முடிந்தவரை விரைவில் தொடங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வான் மேன்மையை எதிர்த்துப் போராடுவதற்கு உக்ரைன் நீண்டகாலமாக நவீன விமானங்களை கோரி வருகிறது. டஜன் கணக்கான F16 களை வழங்குவதற்கான […]

இலங்கை

யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

  • June 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் –  திருநெல்வேலி பகுதியில் வாளொன்றுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி,  பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  குறித்த கைது நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து  மூன்று  அடி நீளமான வாளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதான இளைஞரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் நாணயத்தின் பெறுமதி : இன்றைய நிலைவரம்!

  • June 16, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு  நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி  இன்று(16)  சற்று அதிகாித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 300.51 ரூபாவாகவும்,  விற்பனை விலை 319.66 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை  311.60 ரூபாவாகவும்,  விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட புலானாய்வு அதிகாரி!

  • June 16, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் சம்பம் தொடர்பில் கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தனக்க வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜெண்டின் நடவடிக்கைகள் குறித்து ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த ஆரம்ப விசாரணையின் அடிப்படையில்  அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். […]

பொழுதுபோக்கு

14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “மாங்குயிலே பூங்குயிலே” நாயகன்!! ஜோடி யார் தெரியுமா?

  • June 16, 2023
  • 0 Comments

90களில் கமல், ரஜினி படங்களை தாண்டி அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்த படங்களாக ராமராஜனின் படங்கள் இருந்தது. ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராமராஜன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதுமட்டுமின்றி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று வீம்பாக இருந்ததால் பட வாய்ப்பு வராமல் இருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ராமராஜன் மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இப்போது சாமானியன் படத்தை […]

உலகம்

தென் பசுபிக் பெருங்கடலின் அருகில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • June 16, 2023
  • 0 Comments

தென் பசுபிக் பெருங்கடலின் அருகே உள்ள டோங்கா பகுதிக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டோங்காவின் தென்மேற்கு பகுதியில் 280 கி.மீ தொலைவில் 167.4 கி.மீ ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் அவுஸ்ரேலியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் […]

ஆசியா

பாக்கிஸ்தானில் தொகுப்பாளர்கள் இருவர் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கு

  • June 16, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 9ம் திகதியன்று நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. போராட்டம் நடைபெற்று ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது அங்குள்ள ஆப்பாரா பொலிஸ் நிலையத்தில் சபீர் ஷாகிர் மற்றும் மொயீத் பிர்சாதா ஆகிய 2 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதத்தை […]

வட அமெரிக்கா

பேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து 50ஆயிரம் டொலர்கள் வென்ற பயனாளர்

  • June 16, 2023
  • 0 Comments

தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022ம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் தடை செய்யப்படுவதாக […]

இலங்கை

குருந்தி விகாரைக்கான காணி பகிர்ந்தளிக்கப்படவில்லை – சமன் ஏக்கநாயக்க!

  • June 16, 2023
  • 0 Comments

முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரைக்கு சொந்தமான காணி அரச காணி எனவும் அதனை எவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் முல்லைத்தீவு குருந்தி விகாரைக்கு சொந்தமான காணிக்குள் தமிழ் மக்களைக் குடியேற்றப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். ஹோமாகம பிரதேச செயலகத்தில் நேற்று (15.06) மாலை நடைபெற்ற புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே […]

அறிவியல் & தொழில்நுட்பம் ஐரோப்பா

விந்தணு மற்றும் முட்டை இல்லாமல் செயற்கை மனிதக்கரு உருவாக்கியுள்ளஆராய்ச்சியாளர்கள்

  • June 16, 2023
  • 0 Comments

முட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை மனித கருக்களை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த கருவை சட்ட ரீதியில், 14 நாட்களில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணின் விந்தணு, பெண்ணின் முட்டை இரண்டையும் எடுத்து சேர்த்து, இன்குபெட்டரில் வளர்த்து கருவானவுடன் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் பெண்ணின் கருப்பையில் வைக்கும் ஐ.வி.எப் எனப்படும் வெளிச் சோதனை கருவூட்டல் முறை தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பின்னணியிலேயே, […]

error: Content is protected !!