இலங்கை விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி

  • June 30, 2023
  • 0 Comments

ஐசிசி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை பங்கேற்ற முதலாவது போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது. புலவாயோவில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவா்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் Dhananjaya de Silva அதிகபட்சமாக 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நெதர்லாந்து […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் தேவதர்ஷினியின் மகள்?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருபவர் தேவதர்ஷினி. இவரது கணவர் சேத்தனும் நடிகர் ஆவார். இந்த நட்சத்திர தம்பதியின் மகள் நியதி, ’96’ படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். இதற்கிடையில் தனது மகளின் கியூட்டான புகைப்படங்களை தேவதர்ஷினி வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தனது மகளை தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறக்க அவர் முடிவு செய்திருக்கிறார் என்கின்றனர். நியதியின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பளித்துள்ளனர்.

இலங்கை செய்தி

யாழில் சைவ உணவகமொன்றில் உணவருந்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  • June 30, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்.நகரில் உள்ள சைவ உணவகமொன்றில் உணவருந்தி உள்ளார். மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் யாழ் நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சைவ உணவை உண்டுள்ளார். தொடர்ந்து உணவகத்தில் உணவு உண்பதற்காக வருகை தந்தவர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன், முன்னாள் ஜனாதிபதியுடன் உணவகத்தில் நின்றவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் […]

உலகம்

லண்டனில் பிறந்தநாள் விழாவில் காணாமல் போன 13 வயது சிறுமி! நால்வர் கைது

லண்டனில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற 13 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Brunsleigh பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி நான்கு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போனார். போலீசார் அவரை தேடி வந்த சூழலில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நான்காவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார், […]

இலங்கை

யாழில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு […]

பொழுதுபோக்கு

அமெரிக்கா போய் KPY பாலா கூட பிச்சை எடுத்த மணிமேகலை.. நீங்களே பாருங்க!

  • June 30, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு குட்பை சொல்லிவிட்டு கிளம்பிய மணிமேகலை தற்போது வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க சென்றுள்ளார். அவருடன் KPY பாலாவும் சேர்ந்துக் கொண்டு அடிக்கும் லூட்டி வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குக் வித் கோமாளியில் தொடர்ந்து கோமாளியாக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்த விஜே மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன் பின்னர், பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து […]

இலங்கை

மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை -வாசுதேவ நாணயகார!

  • June 30, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் நாட்டை ஆட்சி செய்கிறது. எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரை் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். மருதானையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை. ஆகவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கணக்காளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு உண்மையை அறிவிக்க வேண்டும். சர்வதேச […]

இலங்கை

தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நாளை (01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டுவரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நெருக்கமாகக் குடிமனைகள் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் […]

இலங்கை

யாழிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி!

3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலை மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில், 3.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உடுப்பிட்டி […]

இலங்கை

கனடா வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுகிறது – அலி சப்ரி!

  • June 30, 2023
  • 0 Comments

கனடா வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விமர்சித்துள்ளார். காலிஸ்தான் விவகாரத்தை கனடா வாக்குவாங்கி அரசியலை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்தை அலி சப்ரி ஆதரித்துள்ளார். இது குறித்து அலி சப்ரி செய்துள்ள டுவிட்டர் பதிவில்  வாக்குவங்கி அரசியல் வேறு என்ன என அலிசப்ரி கேள்வி எழுப்பியுள்ளார். கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

error: Content is protected !!