பேரிடர் குறித்து தவறிழைப்பு: தெரிவுக்குழு அமைக்குமாறு வலியுறுத்து!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் எம்.பி. மேற்படி வலியுறுத்தலை விடுத்தார். “ இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே, குறித்த அனர்த்தம் பற்றி அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததா? இது பற்றி வளிமண்டளவியல் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. மௌன போக்கு […]













