உலகம்

மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவது குறித்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்

  • December 13, 2025
  • 0 Comments

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது புற்றுநோய் குறித்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை ஊடாக புற்றுநோய் பரவலை தன்னால் மட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸ் மன்னர் தமக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்திருந்தார். மன்னர் சார்லஸ் புற்றுநோயின் அபாய கட்டத்திலிருந்து மீண்டுள்ளதுடன், அவரது நோய் தன்மை மிகவும் நேர்மறையான கட்டத்தை எட்டியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மன்னர் முழுமையாக […]

இலங்கை

பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட 26 பேர் அதிரடி கைது

  • December 13, 2025
  • 0 Comments

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 26 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை, இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 22 இளைஞர்களும் 4 யுவதிகளும் அடங்கினர். கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் 21 முதல் 26 வயதுக்குட்பட்ட யுவதிகள் ஆவர். அவர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, […]

இலங்கை செய்தி

அமெரிக்க முதலீடுகளை பெறுவது குறித்து ஆராய்வு!

  • December 13, 2025
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவிடமே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள ‘தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை’ தொடர்பிலும் இதன்போது அவதானம் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் மீளப் பெறப்படும் இலவங்கப்பட்டைப் பொடி (cinnamon powder)! நுகர்வோர் கவனத்திற்கு!

  • December 13, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டுள்ள  இலவங்கப்பட்டைப் பொடி (cinnamon powder)  மீளப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு ஈய மாசுபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15, 2027 என்ற திகதியிடப்பட்ட 40 கிராம் சீல் செய்யப்பட்ட பொதிகளே இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளன. குறித்த தயாரிப்பு 14 அமெரிக்க மாநிலங்களில் உள்ள பல்வேறு சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இந்த தயாரிப்பை உட்கொள்வது இரத்தத்தில் […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனாவின் உதவியும் தொடர்கிறது!

  • December 13, 2025
  • 0 Comments

பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனா உதவும் என நம்பப்படுகின்றது. வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் தொடர்ந்து ஆதரவளிப்பதாக யாங் வான்மிங் உறுதியளித்தார். இலங்கை உடனான சீனாவின் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட […]

அரசியல் இலங்கை செய்தி

18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு: வெளியானது அறிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரமே விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் 2025.12.12 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2466/33ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 18 ஆம் திகதி 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதியை […]

உலகம் செய்தி

புளோரிடாவில் அதிக்கூடிய வெப்பநிலையில் காரில் சிக்கிக்கொண்ட 16 மாதக் குழந்தை!

  • December 13, 2025
  • 0 Comments

புளோரிடாவில் (Florida)  18 மாதக் குழந்தையொன்று நேற்று காரில் சிக்கிக்கொண்ட நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். காரின் வெப்பநிலை 29C (85F) எட்டிய நிலையில், குழந்தை சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாயார் 999 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து உதவிக் கோரிய நிலையில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குழந்தையை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தின் சாவியை தற்செயலாக உள்ளே விட்டுச் சென்றமையால் இந்நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இந்த சம்பவத்தை […]

இலங்கை

‘டிட்வா’ சூறாவளி ஏற்பட முன்னர் 25 முறை இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

  • December 13, 2025
  • 0 Comments

நவம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் 25 சந்தர்ப்பங்களில் ‘டிட்வா’ சூறாவளி குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவலை கூறியுள்ளது. ‘டிட்வா’ சூறாவளி குறித்த முன்கூட்டிய அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாக கடந்த சில நாட்களாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் மீது பல்வேறு தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள அனர்த்த சூழ்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் செயல்பாடு […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

மனிதனின் தூண்டுதல்களே ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுக்கு காரணம்!

  • December 13, 2025
  • 0 Comments

மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றமே ஆசிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவுக்கு மூலக்காரணம் என்று பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலக வானிலை பண்புக்கூறு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, வட இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட அதியுயர் வெப்பம் சூறாவளிகளுக்கு ஆற்றலைச் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட புயல், கடுமையான மழை, மண்சரிவு, வெள்ளம் ஆகியவை காரணமாக 1600இற்கும் மேற்பட்டோர் பலியாகியதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. WWA ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வட இந்தியப் பெருங்கடலில் கடல் […]

இலங்கை

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் 410 வைத்தியசாலைகள் பாதிப்பு

  • December 13, 2025
  • 0 Comments

டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் இலங்கையில் 410 வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகபட்ச சேதங்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக 500க்கும் மேற்பட்ட சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்களை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர மேலும் கால அவகாசம் எடுக்கும் எனக் கூறியுள்ளார். […]

error: Content is protected !!