ஐரோப்பா செய்தி

ஸ்பானிய விழாவில் காளை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

  • September 26, 2023
  • 0 Comments

ஸ்பெயினின் வலென்சியாவில் நடைபெற்ற திருவிழாவில் காளை தாக்கியதில் 61 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் போப்லா டி ஃபர்னல்ஸ் நகரில் நடந்தது. அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது,ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது 63 வயது நண்பரும் அதே காளையால் இரண்டு கால்களிலும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் நிலையான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காளை ஓட்டும் திருவிழா பெரும் கூட்டத்தை ஈர்க்கிறது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பார்வையாளர்கள் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தன்னை தானே சுட்டு கொண்டு உயிரிழந்த சிறுமி

  • September 26, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலம் கன்சாஸ் (Kansas). இதன் தலைநகரம் டொபேகா (Topeka). இங்குள்ள க்ளவுட் கவுன்டி பிராந்தியத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜேலி சில்ஸன் (Jaylee Chillson) எனும் 14 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டாள். இத்தகவல் க்ளவுட் கவுன்டி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. ஜேலி தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா எனும் புறநகர் பகுதியில் ஒரு வெட்டவெளி விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் […]

ஆசியா செய்தி

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக உருவெடுத்த ஆப்கானிஸ்தான் நாணயம்

  • September 26, 2023
  • 0 Comments

தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் நாணயம், இந்த காலாண்டில் உலகிலேயே சிறப்பாகச் செயல்படும் நாணயமாக உருவெடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஆப்கானி குறிப்பிடத்தக்க ஒன்பது சதவீத மதிப்பை கண்டுள்ளது, முதன்மையாக பில்லியன் கணக்கான டாலர்கள் மனிதாபிமான உதவி மற்றும் ஆசிய அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரித்ததன் மூலம் உந்தப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, தலிபான்கள் அதன் நாணயத்தின் மீது உறுதியான பிடியைத் தக்கவைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளில் உள்ளூர் பரிவர்த்தனைகளில் டாலர்கள் […]

இலங்கை

முப்பது வருடகால ஆயுதப் போராட்டம் மௌனித்தபோதிலும், தமிழர்களின் விடுதலை வேட்கை தொடர்கிறது- து.ரவிகரன்

  • September 26, 2023
  • 0 Comments

தமிழர்களின் விடுதலைக்காகவென ஆரம்பிக்கப்பட்ட ஆயுத போராட்டம் முப்பது வருடங்களின் பின் மௌனிக்கப்பட்டபோதும், தமிழர்களின் விடுதலைக்கான பயணம் நினைவேந்தல்களின் மூலமும், ஜனநாயகவழி ஆர்பாட்டங்கள் மூலமும் தொடர்கிறது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் “போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் மாறாது” என்ற தியாகி திலீபனின் கூற்று மெய்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தியாக தீபம் திலீபனின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு – சுதந்திரபுரம் சந்தி வளாகத்தில் இடம்பெற்ற நிலையில், அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் […]

இலங்கை

விமானப்படை முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் பலி!

  • September 26, 2023
  • 0 Comments

புத்தளம் – கற்பிட்டி கண்டல்குளி பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளம் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி, கல்பிட்டியில் உள்ள விமானப்படை கள துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் (28) உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று […]

ஆசியா

அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் வடகொரியாவை அழித்து விடுவோம் – தென்கொரிய அதிபர் எச்சரிக்கை

  • September 26, 2023
  • 0 Comments

வடகொரிய அரசு அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு அமெரிக்காவிடன் இணைந்து முடிவு கட்டிவிடுவோம் என தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் எச்சரித்துற்ளார். அந்நாட்டின் 75வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பில் அதிநவீன ஏவுகணைகள்,டிரோன்கள்,ஏவுகணைக தடுப்பு அமைப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. தென்கொரியாவில் 28ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களில் 300 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

இலங்கை

மின்சாரை சபை மறுசீரமைக்கப்படும் : காஞ்சன விஜயசேகர!

  • September 26, 2023
  • 0 Comments

மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயமாக மறுசீரமைக்கப்படும் என  அமைச்சர்  காஞ்சன விஜேசேகர வலியுறுத்தினார். கொழும்பில் இன்று (26.09) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரச நிறுவனங்களின் செலவின அறிக்கை முறைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

வட அமெரிக்கா

ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்கள் மீது புதிய தடைகளை விதித்துள்ள அமெரிக்கா

  • September 26, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கு ட்ரோன் பாகங்களை விநியோகித்ததற்காக ஐந்து ரஷ்ய மற்றும் 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது மற்றும் ஏற்றுமதி செய்வதை கடினமாக்கும் வகையில் தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை இவ்வாறு தடை விதிக்கப்பட்ட ஒன்பது நிறுவனங்கள் ஏற்கனவே மே மாதத்தில் அமெரிக்கா விதித்த தடையை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு

இராமேஸ்வர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை- பொலிஸார் விசாரணை

  • September 26, 2023
  • 0 Comments

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்கள் கொண்டு தாக்கியதில் அதில் இருந்த பிராங்கிளின் என்ற மீனவர் கற்கள் பட்டதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து […]

இந்தியா

குமரகுரு கல்லூரியில் பாரத் ப்ளாக்செயின் யாத்ரா விழிப்புணர்வு

  • September 26, 2023
  • 0 Comments

பாரத் ப்ளாக்செயின் யாத்ரா (BBY) எனும் புகழ் பெற்ற நிகழ்ச்சி Information Data Systems (IDS) எனும் நிறுவனத்தால் Hedera எனும் நிறுவனத்தின் பங்களிப்புடன், அகில இந்திய தொழிநுட்பக் கல்விக்குழுவின் ஆதரவுடன் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் குமரகுரு புதுமுறைப் பள்ளியால் நடந்தது. குமரகுரு புதுமுறைப் பள்ளி இப்பெருமதிப்பிற்குரிய நிகழ்ச்சி நடைபெறும் தமிழகத்தின் முதல் மற்றும் இந்தியாவின் ஐந்தாவது கல்லூரியும் ஆகும். பாரத் ப்ளாக் செயின் யாத்ரா நாட்டில் ப்ளாக் செயின் மற்றும் வெப் 3 போன்ற தொழினுட்பங்களை […]

error: Content is protected !!