ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டு சம்பவங்கள் – மக்களின் கவனத்திற்கு!!

  • December 14, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விமான நிலைய பார்க்கிங்கை இலக்காகக் கொண்ட கார் திருட்டுகள் அதிகரித்து வருவது தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பயணிகள்   “அதிகாரப்பூர்வமற்ற” நீண்ட கால பார்க்கிங் நடத்துபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிறுவன விதிகளை மீறாத வரை எவரும் பார்க்கிங் ஆபரேட்டராக (operator) வர்த்தகம் செய்யலாம். மோசடி நிறுவனங்கள் பெரும்பாலும் சரியான ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கவில்லை, இதனால் கட்டுமான தளங்கள் அல்லது வயல்கள் போன்ற பாதுகாப்பற்ற நிலங்களில் இடவசதியை செய்துக் […]

இலங்கை

100 செயற்கைக்கோள் இணைய அலகுகளை இலங்கைக்கு வழங்கும் ஸ்டார்லிங்க்!

  • December 14, 2025
  • 0 Comments

நாட்டில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் (Starlink)  100 செயற்கைக்கோள் இணைய அலகுகளை நன்கொடையாக அளித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சக செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய  இது தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், அதிகாரிகள் நிவாரணம் மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மிகவும் திறமையாக மேற்கொள்ள உதவும் என அவர் […]

இலங்கை செய்தி

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் – இதுவரை 3.4 பில்லியன் சேகரிப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு (Rebuilding Sri Lanka)  இதுவரை   3,421 மில்லியனுக்கும் அதிகமான தொகை கிடைக்கப்பெற்றுள்ளதாக  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். உள்ளூர் வணிகர்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நிதிக்கு பங்களித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, இதுவரை பெறப்பட்ட மொத்த பணம்  3.4 பில்லியனாகும்.  இது அமெரிக்க வழங்கிய 11 […]

உலகம் செய்தி

பெலாரஸில் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை ஏற்ற உக்ரைன்!

  • December 14, 2025
  • 0 Comments

“உளவு பார்த்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம்” உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 123 பேரை பெலாரஸ்ய அரசாங்கம் நேற்று விடுவித்துள்ள நிலையில் அவர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட கைதிகளில் இரண்டு முக்கிய பெலாரஷ்ய ஆர்வலர்கள், நோபல் பரிசு வென்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி (Ales Bialiatski)  மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மரியா காலெஸ்னிகாவா (Maria Kalesnikava) ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கைதிகளில் 114 பேர் உக்ரைனுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒன்பது பேர்,   லிதுவேனியாவுக்கு மாற்றப்பட்டதாக உக்ரைன் […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் அவர்களின் கை துண்டிக்கப்படும்!

  • December 14, 2025
  • 0 Comments

ஹமாஸ் தலைவர் ரேத் சாத்தை (Raed Saad) படுகொலை செய்ய உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலியப் படைகள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தி, ஐடிஎஃப் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தாலும், அவர்களின் கை காசாவிலும் மற்ற எல்லா இடங்களிலும் துண்டிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் அனைத்து குடிமக்களின் சார்பாக,  காயமடைந்த போராளிகள் விரைவில் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை

  • December 14, 2025
  • 0 Comments

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். பிரதம அமைச்சர் இணைத்தலைமை வகிப்பார் 2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்த சபை நிறுவப்பட்டது. எனினும், அச்சபையின் செயல்பாடு இயங்கா நிலையிலேயே இருந்து வந்தது. எனவே , மேற்படி சட்டத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுக்கு இணையாக சீனாவும் களத்தில்: பீஜிங் உயர்மட்ட தலைவர் 23 ஆம் திகதி கொழும்பு விஜயம்!

  • December 14, 2025
  • 0 Comments

சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறும் என்று ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் மூன்றாவது அதிஉயர் அதிகாரம் படைத்தவரான, சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழு தலைவரான சோ லெஜி என்பவரே இரு நாள் விஜயமாக இலங்கை வருகின்றார். பேரிடருக்குப் பின்னர், இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையிலேயே தமது உதவி […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டத்துக்கு பதிலாக வரவுள்ள புதிய சட்டத்தின் ஏற்பாடுகள் எவை?

  • December 14, 2025
  • 0 Comments

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தின் கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரியவருகின்றது. சண்டேடைம்ஸ் வார இதழ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது. இச்சட்டத்தை நீக்குமாறு அனைத்துலக சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. இந்நிலையில் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் -இலக்கம்-2026’ என்ற புதிய சட்ட வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் […]

அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை சாத்தியமா?

  • December 14, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே கட்சி செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தாங்கள் எதை கூறினாலும் மக்கள் நம்பக்கூடும் என்ற நோக்கிலேயே தற்போது எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கருத்துகளை வெளியிட்டுவருகின்றது. இதனை உறுதிப்படுத்துகின்றது சட்டத்தரணி சாகர […]

இலங்கை

மலேசியாவில் இருந்து வருகை தந்த நபர் விமான நிலையத்தில் கைது!

  • December 14, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.300 கிலோகிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. குறித்த நபர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!