கருத்து & பகுப்பாய்வு செய்தி

பெர்முடா கடற்பகுதியின் அடியில் காணப்படும் மர்மம்- புதிய கண்டுப்பிடிப்பு!

  • December 16, 2025
  • 0 Comments

பல மர்மங்கள் புதைந்துக் கிடக்கும் பெர்முடா  தொடர்பான புதிய கண்டுப்பிடிப்பை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பாறை அடுக்கு, தீவுக்கூட்டத்தின் நடுவில் கடலில் மிதப்பது போன்ற தோற்றப்பாடு தெரிவதாக ஆய்வாளர்கள் இயற்பியல் ஆராய்ச்சி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வில் அதன் பாறை தோற்றப்பாடு, அமைப்பு தொடர்பில் விளக்கியுள்ளனர். பொதுவாக , எரிமலைத் தீவுகள், மக்மா குழம்புகள் என்பன பூமியின் ஆழத்தில் புதைந்துக்கிடக்கும்.  அவை பூமியின் மேலோட்டத்தை மேலே தள்ளுகின்றன. […]

உலகம்

மெக்ஸிகோவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்து – 07 பேர் பலி!

  • December 16, 2025
  • 0 Comments

மெக்ஸிகோவின் மத்திய பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்க முயன்றபோது  விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மெக்ஸிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அட்ரியன் ஹெர்னாண்டஸ் (Adrián Hernández)  இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மெக்ஸிகோ நகரத்திற்கு மேற்கே சுமார் 31 மைல் (50 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள டோலுகா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் அருகில் இருந்து தொழிற்துறை மையத்திற்கு அருகாமையில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்த […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறிவைப்பு: பேரிடர் நிவாரணம் குறித்து ஐதேக சந்தேகம்!

  • December 16, 2025
  • 0 Comments

” நிவாரணத்தைக் காண்பித்து மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவே தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நிதியை பகிர்ந்தளித்து மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஜோக்கர்கள் நினைக்கின்றனர். பேரிடர் நிலையை பயன்படுத்தி மாகாணசபைத் தேர்தலை நடத்த […]

இலங்கை

மூன்றாம் தவணைப் பரீட்சையை தடைசெய்ய கல்வி அமைச்சு உத்தரவு!

  • December 16, 2025
  • 0 Comments

2025 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம்  தவணைப் பரீட்சை  நடத்துவதைத் தடை செய்யும் உத்தரவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அனைத்து பாடசாலை முதல்வர்கள் உட்பட தொடர்புடைய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. சுற்றறிக்கைக்கு அமைய, இந்த விஷயத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு விதிவிலக்கு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

  • December 16, 2025
  • 0 Comments

பொலிஸ் விசாரணை முடிவடைந்து அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும். ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க எம்.பி. மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். விபத்து சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியே விபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என தேசிய மக்கள் […]

உலகம்

போண்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் – இஸ்லாமிய சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்ட தாக்குதல்தாரிகள்!

  • December 16, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் கடந்த மாதம் பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்துள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். அவர்களின் பயணத்திற்கான காரணங்களை வெளியிடாத காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர். துப்பாக்கிதாரிகள் இஸ்லாமிய அரசின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் அவர்களில் ஒருவர் பயன்படுத்திய வாகனத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு இஸ்லாமிய அரசின் கொடிகளைக் கண்டுபிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை

அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க நடவடிக்கை!

  • December 16, 2025
  • 0 Comments

வெள்ளம், மண்சரிவு மற்றும் சாலை அடைப்புகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் இன்று (16) அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு விடுமுறையைப் பெற, பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தங்கள் நிறுவனத் தலைவரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதில் அவர்கள் […]

உலகம் செய்தி

உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வரும் சாத்தியம்: ட்ரம்ப் கூறுவது என்ன?

  • December 16, 2025
  • 0 Comments

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் தான் விரிவான கலந்துரையாடலிலட் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து எமக்கு பேராதரவு கிடைக்கின்றது. அவர்களை போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். மேற்குலக நாடுகள் தமக்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில் நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி, விநியோக ஏற்பாடு குறித்து விசேட கூட்டம்!

  • December 16, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிடைக்கப்பெறும் வெளிநாட்டு உதவிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு மனிதாபிமான உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது மூன்றாவது கூட்டத்தை அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயலகத்தில் நேற்று நடத்தியது. இதன்போதே மேற்படி விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவே மேற்படி குழுவுக்கு தலைமை […]

இலங்கை செய்தி

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு கனடா ஆதரவு!

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கையை மீளக் கட்யெழுப்பும் வேலைத்திட்டத்துக்கான ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இது பற்றி பேசப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது . டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பேசப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார். அத்துடன் விவசாயத் துறை மற்றும் எதிர்கால ஆசிரியர்-மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையை மீளக் […]

error: Content is protected !!