பொழுதுபோக்கு

இந்த பாடலின் உரிமம் இளையராஜாவுக்கே இல்லை… – டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மலையாளத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்” படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டதற்காக நீதிமன்றமும் சென்றார் இளையராஜா. ஆனால் இந்த முறை இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதற்கான காப்புரிமை அவருக்கே கிடையாது என அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

இளையராஜா இசையமைத்த “மூடுபனி” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் ‘என் இனிய பொன் நிலாவே’. பிரபல பாடகர் யேசுதாஸ் பாடிய இந்த பாடல் தற்போது வரை இளையராஜாவின் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பாடலை தற்போது பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள “அகத்தியா” திரைப்படத்தில் ரீக்ரியேட் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

பழைய பாடலை யேசுதாஸ் பாடியிருந்த நிலையில் இந்த பாடலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் பாடியிருந்தார். இந்நிலையில், ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் காப்புரிமை தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அனுமதியின்றி இந்த பாடலை “அகத்தியா” படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும் ‘சரிகம நிறுவனம்’ டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதாவது “மூடுபனி” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களின் சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் மியூசிக்கல் வொர்க்ஸ் ஆகியவற்றின் காப்புரிமை தங்களிடம் தான் உள்ளது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் மனுவில் சரிகம நிறுவனம் கூறியிருந்தது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த பாடலை உபயோகப்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்றதாக “அகத்தியா” திரைப்படத்தின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், “அந்த பாடலுக்கான காப்புரிமையை நாங்கள் தான் முறைப்படி உரிமை பெற்று வைத்திருக்கிறோம். தயாரிப்பாளரிடம் போடப்பட்ட ஒப்பந்தமும் எங்களிடம் உள்ளது. இதனால் இசையமைப்பாளர் என்ற முறையில் இளையராஜா அந்த பாடலை பிறருக்கு வழங்க முடியாது” என்று கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தது சரிகம நிறுவனம்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆதாரங்களை முழுமையாக ஆராய்ந்த பின் தீர்ப்பளித்தார். அதன்படி, “என் இனிய பொன் நிலாவே” பாடல் காப்புரிமை சரிகம நிறுவனத்திடமே உள்ளது என்றும், அந்த பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதனால் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா 3ம் நபருக்கு அந்த பாடலை வழங்க அனுமதி அளிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

எனவே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட அந்த பாடலை ‘அகத்தியா’ திரைப்படத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக நீதிபதி மினி புஷ்கர்னா அதிரடியாக உத்தரவிட்டார்.

அதே நேரம் 30 லட்சம் ரூபாய் உரிமத் தொகை செலுத்தி இந்த பாடலை திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் வேல்ஸ் நிறுவனம் இந்த தொகையை கட்ட மறுத்து இந்த பாடலை படத்தில் இருந்து நீக்கியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்