ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 100,000 டொலர் மதிப்புள்ள கார் மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள வீட்டில் இருந்து 100,000 டொலர் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அண்மையில் இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து கார் உள்ளிட்ட பொருட்களை திருடிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் டோவெட்டனில் உள்ள ஹாக்கி தெருவில் உள்ள வீட்டிற்குள் அந்த நபர் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் இருந்த பணம், நகை, கார் சாவி உள்ளிட்ட பல பொருட்களை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் குற்றவாளி சுமார் 100,000 டொலர் பெறுமதியான காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 5.28 மணியளவில் சந்தேகநபர் பெட்ரோல் திருடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நபர் ஆப்பிரிக்க தோற்றத்தில் கறுப்பு ஆடை அணிந்திருப்பவர் என துப்பறியும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் அல்லது கேமரா காட்சிகள் இருப்பவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!