இலங்கை செய்தி

கை, கால்கள் இன்றில் கால்வாயில் காணப்பட்ட சடலம்

கலாவெவ தேசிய பூங்காவில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் கல்கிரியாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று (06) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்கிரியாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கலாவெவ தேசிய பூங்காவிற்கு சொந்தமான பலலுவெவ இஸ்மத்தே கல்கொடவல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் சடலம் மிதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், உடலில் இருந்து இரண்டு கைகள் மற்றும் ஒரு கால் காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை, இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில், கெக்கிராவ நீதவானால் இன்று பிற்பகல் ஸ்தல விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது, அங்கு கெக்கிராவ நீதவான் முன்னிலையில் கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் கெக்கிரவ பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவின் பிரகாரம், கல்கிரியாகம பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் கண்காணிப்பு வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content