உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது!

போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டிற்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

39 வயதான மார்ட்டின் க்ளின் (Martin Glynn) என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று  பெர்த் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருடைய வீட்டை சோதனை செய்ததில் பல துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் வெடிகுண்டுப் பொருட்களை கொள்வனவு செய்தமைக்கான பட்டியல் கிடைக்கப்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து வந்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஆஸ்திரேலிய அரசாங்கத்தால்  பயங்கரவாதக் குழுக்களாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாவின் கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வழக்குறைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆறு துப்பாக்கிகள் மற்றும் சுமார் 4,000  வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நீதிபதி பெஞ்சமின் டையர்ஸ் கருத்து வெளியிடுகையில், அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை ஆதரிக்கும் ஆன்லைன் கருத்துகளை இடுகையிடுவது சரியானதல்ல” என்று கூறியுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மார்ட்டின் க்ளினுக்கு  (Martin Glynn) பிணை மறுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!