ஐரோப்பா

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையானவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆயுததாரிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரான்சின் தெற்கு நகரமான Marseille – 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள சுற்றுலாப்பகுதியான Château-Gombert இற்கு வருகை தந்திருந்த 30 வயதுடைய ஒருவர், தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது மகிழுந்தில் ஏற முற்பட்டபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

30 வயதுடைய குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த வாரமே விடுதலையாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Marseille நகரில் இவ்வருடத்தில் இதுவரை 18 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

(Visited 1 times, 1 visits today)
See also  ஸ்பானிய F-18 ஜெட் விமானம் விபத்து - விமானி மரணம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content