புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

சிறு வயதிலேயே தேசிய விருது வென்ற நடிகை.. ஒரே ஒரு தவறால் மொத்த கரியரும் காலி

நடிகை ஸ்வேதா பாசு சிறுவயதில் தேசிய விருது பெற்றவர். 2014ல் பாலியல் தொழில் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்கப்பட்டது.

திரையுலகம் மிகவும் விநோதமானது. ஒரே இரவில் உச்சத்துக்கு கொண்டு சென்று வெற்றியை பரிசளிக்கும். அதேபோல ஒரு தவறு மொத்த திரையுலக பயணத்தையும் பாதித்துவிடும்.

அதுவரை கட்டிக்காத்த அனைத்து பிம்பத்தையும் சில சர்ச்சைகள் உடைத்துவிடும். அதிலிருந்து மீண்டு வருவது பெரும் சிரமம்.

அப்படியொரு சர்ச்சையில் சிக்கி தனது மொத்த திரையுலக பயணத்தையும் இழந்தவர் தான் நடிகை ஸ்வேதா பாசு. முன்பு சர்ச்சைகளில் சிக்கியவர் இன்று ஆன்மிகத்தை நாடி பயணித்து வருகிறார்.

சிறுவயதிலேயே திரையுலகில் அறிமுகமான ஸ்வேதா பாசு தான் நடித்த ‘மக்டீ’ படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்று அசத்தியவர். அடுத்து ‘இக்பால்’ படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார்.

தமிழில், ‘ராரா’, ‘சந்தாமாமா’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடித்து கவனம் பெற்றார்.

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்வேதா பாசு, தற்போது முற்றிலும் சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார். மேலும் கணவருடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இப்படியிருந்த ஸ்வேதா வாழ்க்கையில், 2014-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதற்கு காரணம் அவர் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர் ஹைதராபாத்தின் நாம்பள்ளி செஷன் கோர்ட் ஸ்வேதா மீதான குற்றச்சாட்டுகள் பொய் என கூறி அவரை விடுவித்தது. பின்னர் தயாரிப்பாளர் ரோஹித் என்பவரை திருமணம் செய்தார். தற்போது விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வருகிறார்.

 

(Visited 55 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!