இலங்கை : தென்கிழக்கு பல்கலைக்கத்தின் அனைத்து பீடங்களையும் மூட நடவடிக்கை!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களின் கற்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பிரயோக விஞ்ஞான பீடத்தின் கற்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





