ஐரோப்பா

பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் ப்ரிம்ரோஸ் மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டு வருகைக்காக அனைவரும் காத்து இருந்த அந்த வேளையில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு இரவு 11.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

ஆம்புலன்ஸ் குழுவினர் வரும் வரை சிறுவனுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
See also  60mph வேகத்தில் வரும் காற்று : இங்கிலாந்து மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content