இலங்கை

இலங்கையில் அதிகாலையில் விபரீதம் – சுற்றிவளைப்பிற்கு சென்ற அதிகாரி சுட்டுக்கொலை

வெலிகம, ஜம்புரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.

கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வான் ஒன்றில் ஜம்புரேகொட பிரதேசத்திற்கு வந்துள்ளதுடன், சில குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு சுட்டுக்கொல்லப்பட்ட சார்ஜன்ட் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் கால்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயம் ஏற்பட்டது.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட பொலிஸ் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்