நெல்லையில் நடிகர் விஜய்யை காண கூடிய இரசிகர்களால் பரபரப்பு!
நெல்லையில் நடிகர் விஜையை காண ஒன்றுத்திரண்ட ரசிகர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மண்டபத்தின் சுவர் ஏறி குதித்து இரசிகர்கள் உள்ளே வர முயற்சித்தமையால், மண்டபத்தின் இருபுறமும் கயிறு கட்டி ரசிகர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை நிர்வாகிகள் முன்னெடுத்தனர்.
டோக்கன் வைத்திருக்கும் பயனாளிகள் மட்டும் மண்டபத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவதால் ரசிகர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே வர முயற்சி செய்துள்ளனர்.
ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
(Visited 11 times, 1 visits today)





