முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக்கின் விசாரணை: இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் விடுத்துள்ள சிறப்பு உத்தரவு
முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை எந்தவிதமான கூட்டங்களோ , நிகழ்வுகளிலோ ஏற்பாடு செய்ய முடியாது என முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்திற்கும் அனைத்து கழகங்களுக்கும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) சிறப்பு உத்தரவு ஒன்றினை வழங்கியுள்ளது.
அவ்வாறு மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுளள்து.
முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை உதைபந்தாட்ட சங்கம் அறிவித்திருந்தும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து நேற்றையதினம் (21.12.2023) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுளளது. .
(Visited 10 times, 1 visits today)





