இந்தியா

உத்திரபிரதேசத்தில் ரூ.200 கடனுக்காக மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல்!

உத்தரபிரதேசத்தில் ரூ.200 கடனை திருப்பித் தர இயலாத மாணவரை அரை நிர்வாணமாக்கி தாக்கி வீடியோ வெளியிட்ட அவரது நண்பர் மற்றும் சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் தன்னுடன் படிக்கும் நண்பனிடம் ரூ.200 கடன் பெற்றுள்ளார். கடந்த திங்கள்கிழமை, அங்குள்ள ஒரு பூங்காவில் அந்த மாணவரும், அவரது நண்பரும் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ராணுவ வீரர்களின் பயிற்சியை பார்வையிடலாம் என கூறி அழைத்துச் சென்றனர்.

ஆனால், பின்னர் தான் தெரியவந்தது. அது நண்பரின் கூட்டாளிகள் என்பது. காட்டுப் பகுதியில் மேலும் இருவர் சேர்ந்து ரூ.200 கடன் பெற்ற மாணவரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கூறினர். தன்னிடம் தற்போது பணம் இல்லை என கூறியதால், அவர்கள் அனைவரும் அந்த மாணவரை அரை நிர்வாணப்படுத்தினர்.

மேலும்,மது அருந்தச்சொல்லி வற்புறுத்தி, கம்புகளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ததோடு பொலிஸில் புகார் அளி்த்தால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பி வந்த மாணவர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும், மாணவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர், இந்த சம்பவம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து இதில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content