ஐரோப்பா

கிரீஸ் நாட்டில் வணிக வளாகம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம்!

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதேன்ஸ் அருகே பிரயஸ் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் அருகே வணிக வளாகம் உள்ளது.

இந்நிலையில், இந்த வணிக வளாகம் அருகே இன்று அதிகாலை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் வணிக வளாகத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், வணிக வளாகத்தின் கண்ணாடிகள் உடைந்தன.

அதிகாலை நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படவில்லை, யாருக்கும் எந்த வித பாதிப்பும், காயமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியது யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!