மத்திய கிழக்கு

யாரும் உயிருடன் இருக்க முடியாது – ஹமாஸ் எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் தங்கள் கைதிகளை விடுவிக்க, பிணை கைதிகள் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லை என்றால் இஸ்ரேல் பிணை கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று எச்சரித்தது.

இதனை தொடர்ந்தும் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் இராணுவ தகவல் தொடர்பு தளம், தெற்கு காசாவில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் காசா நகரில் ஷேஜாயாவில் உள்ள ஹமாஸ் இராணுவ கட்டளை மையம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

காசாவின் 2.4 மில்லியன் மக்களில் 1.9 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் . அவர்களில் பாதி பேர் குழந்தைகள். காஸாவின் 36 மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது.

பிணை கைதிகளை மீண்டும் விடுவிக்க போர் நிறுத்ததை மீண்டும் செயல்படுத்த கத்தார் அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை குறைத்து உள்ளது என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், போர் நிறுத்தம் வேண்டாம் என கூறினார். ஹமாஸ் இன்னும் உயிருடன் இருப்பதால் தான் நிலைமை இன்னும் அப்படியே உள்ளது என்று அவர் கூறினார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.