செய்தி தமிழ்நாடு

தூய்மை பணியாளரை பாராட்டி வெகுமதி வழங்கிய போலீசார்

கீழே கிடைத்த செல்போனை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளரை பாராட்டி வெகுமதி வழங்கிய போலீசார்.

சென்னை பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்த சந்திரசேகர், சத்யா தம்பதியினர், நேற்று இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, செல்போனை தவறவிட்டனர். இது குறித்து, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், அதே பகுதியில், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த, மடிப்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்பவர், சாலை ஓரம் விலை உயர்ந்த செல்போன் கிடப்பதை பார்த்து, அதை எடுத்து, பெரும்பாக்கம் காவல் நிலையம் சென்று, உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி கொடுத்தார்.

பின்னர், செல்போனை தவறவிட்ட தம்பதியினரை வரவழைத்த போலீசார், செல்போனை அவர்களுடையது என்பதை உறுதி செய்து, ஒப்படைத்தனர். ரூபார் 32 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி, காவல்நிலையத்தில் கொடுத்த மகாலட்சுமியை போலீசார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!