ஆசியா செய்தி

தலைமுடி குட்டையாக இருந்ததால் பெண்ணை தாக்கிய தென் கொரிய நபர்

தென் கொரியாவில் பெண் கன்வீனியன்ஸ் ஸ்டோர்(மளிகை கடை) தொழிலாளி ஒருவரை பெண்ணியவாதி என்று நினைத்து நள்ளிரவில் தாக்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு நகரமான ஜின்ஜுவில் உள்ள கடைக்குள் நள்ளிரவு 20 வயது மதிக்கத்தக்க ஆண், அந்தப் பெண்ணை அடித்து உதைப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது.

தலையிட முயன்ற 50 வயதுடைய மற்றொரு வாடிக்கையாளரையும் அவர் தாக்கினார்.

தலைமுடி குட்டையாக இருந்ததால் அவர் பெண்ணை தாக்கியதாகவும், அதனால் அவர் பெண்ணியவாதி என கருதியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

“உனக்கு குட்டையான முடி இருப்பதால், நீ பெண்ணியவாதியாக இருக்க வேண்டும். நான் ஒரு ஆண் பேரினவாதி, பெண்ணியவாதிகள் தாக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் அவளிடம் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தும் வரை அவர் தாக்குதலை தொடர்ந்தார்.

அவர் குடிபோதையில் இருந்ததாகவும், முன்பு ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!