இலங்கையில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது குறித்த நடவடிக்கைய மீளவும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)