இலங்கை செய்தி

அடுத்த IMF கடன் தவணை பற்றி அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டத்தின் முதல் மதிப்பீடு எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் குழுவை பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அந்த கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை விடுவிக்கப்படும் என தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!