மகளை கொன்று துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிட்ட தாய்..!
 
																																		பிரேசிலில் பெற்ற மகளை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்த கொடூர மனம் படைத்த தாயாரை பொலிஸார் கைது செய்தனர்.
கணவரை பிரிந்த ரூத் ஃபுளோரியானோ 9வயது மகள் மற்றும் ஆண் நண்பருடன் சௌபவுலோ நகரில் வசித்துவந்தார்.
கடந்தவாரம் வீட்டிற்கு வந்த ஆண் நட்பரின் தாயார் பிரிட்ஜில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதுதொடர்பாக ஃபுளோரியானோவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, கணவரை விவாகரத்து செய்த்தால் மகள் அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கடந்த 8ம் திகதி போதையில் மகளை கத்தியால் குத்தி கொன்றதாகவும் ஒப்புகொண்டார்.
சடலத்தை அப்புறப்படுத்துவது எப்பிடி என இணையத்தில் தேடிய ்புளோரியானோ, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து அவற்றை அப்புறப்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
        



 
                         
                            
