இலங்கை

பொருளாதார நெருக்கடியில் உள்ள பிரண்டினா பயனாளிகளுக்கு நிதியுதவி

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள 2091 பிரண்டினா பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரண்டினா “லைப் லைன்” நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பசளை தட்டுப்பாட்டுடன் உணவு தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு பிரண்டினா லைப் லைன் திட்டத்தின் ஊடாக 3500 ரூபாய் வீதம் தெரிவு செய்யப்பட்ட 2091 பேருக்கு இக்கொடுப்பனவு (26) வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பிரண்டினா லைப் லைன் திட்டத்தின் பிரதி பொது முகாமையாளர் பீ. ரஹீம், பிராந்திய முகாமையாளர் ஈ. திருச்செல்வம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.இந் நிதியினை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.முகம்மட் ரியாட் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் எஸ். டபிள்யூ. எஸ். டி. திஸாநாயக்க சிரேஷ்ட தபால் அதிபர் எம். விஜயகுமார், விவசாய போதனாசிரியர் ஜே. ஜே ஜசாட் ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content