இந்தியா

இந்தியாவில் அரசு பேருந்துக்குள் பெய்த மழை…குடை பிடித்தபடி ஓட்டிய சாரதி (வீடியோ)

இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால், பேருந்து ஓட்டுநர் குடை பிடித்து ஒட்டிய அவலம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.அந்த பேருந்தில் தான் இந்த அவலம் நடந்துள்ளது. அங்கு, இயக்கப்படும் ஒரு அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால் குடை பிடித்தவாறே ஓட்டுநர் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில், அரசு பேருந்தின் உள்ளே தண்ணீர் ஒழுகுகிறது. அதில் நனையாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் குடை பிடித்தவாறே பஸ்ஸை ஓட்டுகிறார்.

மழை நீர் ஒழுகிய இந்த பேருந்து கட்சிரோலி அகேரி டிப்போவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.மேலும், அரசு பேருந்தை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த கவலையும் எழுகிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content