இந்தியாவில் அரசு பேருந்துக்குள் பெய்த மழை…குடை பிடித்தபடி ஓட்டிய சாரதி (வீடியோ)
இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால், பேருந்து ஓட்டுநர் குடை பிடித்து ஒட்டிய அவலம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.அந்த பேருந்தில் தான் இந்த அவலம் நடந்துள்ளது. அங்கு, இயக்கப்படும் ஒரு அரசு பேருந்தின் உள்ளே மழை தண்ணீர் ஒழுகியதால் குடை பிடித்தவாறே ஓட்டுநர் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில், அரசு பேருந்தின் உள்ளே தண்ணீர் ஒழுகுகிறது. அதில் நனையாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் குடை பிடித்தவாறே பஸ்ஸை ஓட்டுகிறார்.
மழை நீர் ஒழுகிய இந்த பேருந்து கட்சிரோலி அகேரி டிப்போவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.மேலும், அரசு பேருந்தை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த கவலையும் எழுகிறது.