இலங்கை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு மன்னிப்பு கிடையாது – தேரரின் அதிரடி அறிவிப்பு

பௌத்த மதத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் கோடி முறை மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாதென இரத்மலானை தர்ம ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஹெகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

அதற்கு சட்டத்தின் மூலமே பதிலளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த மதத்தை அவமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே அவ்வாறு செய்தார் எனவும் அவர் தவறுதலாக அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் பௌத்த மதத்தை அவமதித்ததற்கு அவருக்காக பெற்றோர்கள் சென்று மன்னிப்பு கேட்பதாகவும், இது நாட்டு மக்களின் அனுதாபத்தை பெறும் முயற்சி என தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்தம் ஒரு வெளிப்படையான மதம் எனவும் அந்த மதத்தை இழிவுபடுத்துவதை மன்னிக்க முடியாது எனவும் இதுபோன்ற அவமதிப்புகளுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நாட்டில் மத மோதல்களும் மதக் கும்பல்களும் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

See also  ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

 

(Visited 13 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content