அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை பௌத்த விகாரை ஒன்றில் 03 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு
மெல்பேர்னில் உள்ள இலங்கை பௌத்த விகாரையின் தலைவர் நாவோதுன்னே விஜித தேரர் 03 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
68 வயதான அவர் இன்று (18) மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது.
1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மெல்போர்னின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த விகாரை ஒரு தம்மப் பள்ளியையும் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
Springvale மற்றும் Keysborough ஆகிய பகுதிகளை அண்மித்த பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இன்று நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் விகாரையின் தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 10ம் திகதி நடைபெறும்.