வட அமெரிக்கா

கரீபியன் தீவில் அதிகரித்துள்ள குற்றங்கள்; அமெரிக்கா ராணுவ உதவி

கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக அளவு குற்றங்கள் நடக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகரிப்பின் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களால் ஹைதி அதிபர் மோய்சே சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின்னர் ஹைதி அதிபராக ஏரியல் ஹென்றி தற்காலிகமாக பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் நாட்டில் குற்றங்கள் அதிக அளவில் பெருகியதாகவும் அதனை கட்டுப்படுத்த தங்களிடம் போதுமான பொருளாதார வசதி இல்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஹென்றி முறையிட்டார்.

அதன்படி ஹைதி நாட்டுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. கென்யாவுடன் கூட்டு சேர்ந்து ராணுவ வீரர்களை ஹைதியில் களம் இறக்க அமெரிக்கா தலைமையில் ஏற்பாடுகள் நடக்கின்றன.

முதற்கட்டமாக ஆயிரம் வீரர்களை சோதனை முறையில் களம் இறக்கி ஹைதி நாட்டு ராணுவத்துடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். மேலும் சர்வதேச நாடுகள் சபை உறுப்பினர்களிடமும் உதவிக்கோரப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்