இலங்கை செய்தி

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேண்டாம் – மத்திய வங்கி அறிவுரை

பணமோசடியை தடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அண்மையில் ரியல் எஸ்டேட் துறைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

ரியல் எஸ்டேட் துறையில் பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுப்பது போன்ற பொறுப்புகளை வெற்றிகரமாக அமுல்படுத்துவதன் மூலம் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் அபாயங்களை குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்காக நிதி புலனாய்வு பிரிவு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் ரியல் எஸ்டேட் துறையின் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் துறையில் இணக்கத்தின் அளவை மேம்படுத்துவதற்காக, ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை, அத்துறையின் ஒழுங்குமுறை அதிகாரிகளின் பல பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலிக்குமாறு விழிப்புணர்வு திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை