ஐரோப்பா

ஜார்ஜியாவில் துப்பாக்கி சூடு சம்பவம்; பெண் உள்பட நால்வர் பலி

ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு தெற்கே 35 மைல்கள் தொலைவில் ஹாம்ப்டன் என்ற நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தி நியூயார்க் டைம்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது.

அவர்களில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் அடங்குவர் என ஹாம்ப்டன் நகர காவல் தலைவர் ஜேம்ஸ் டர்னர் கூறியுள்ளார். எனினும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த துப்பாக்கி சூட்டில், ஆண்ட்ரி லாங்மோர் (40) என்பவர் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக நான்கு கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

எனினும், இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிய வரவில்லை. அவருக்கு உயிரிழந்தவர்களை பற்றி முன்பே நன்றாக தெரியுமா? என்பது கூட தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். லாங்மோரை கைது செய்வதற்கான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.8.2 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்