உலகம்

புனித குர்ஆன் எரிப்பு: ஐநா மனித உரிமைகள் பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

புனித குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது.

பாகிஸ்தானும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிற நாடுகளும் கூட்டாக இந்தக் கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தன

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 28 நாடுகளும், எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. 7 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சீனா, இந்தியா, கியூபா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், வியட்நாம் ஆகிய நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கோஸ்டாரிகா, மாண்டினீக்ரோ போன்ற நாடுகள் எதிராக வாக்களித்தன. அவை பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டங்களுடன் முரண்படுவதாக வாதிட்டன

பெனின், சிலி, மெக்சிகோ, நேபாளம் போன்ற நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

கடந்த மாதம், ஈத் அல்-அதா விடுமுறையின் போது ஸ்டாக்ஹோமில் உள்ள மசூதிக்கு வெளியே ஒருவர் குர்ஆனின் பக்கங்களைக் கிழித்தும், சிலவற்றைக் கொண்டு தனது காலணிகளைத் துடைத்தும், மற்றவற்றை எரித்ததற்கும் ஈராக் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

 

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!