ஆசியா செய்தி

சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு துப்பாக்கிச்சூடு

சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சண்டையில் நேபாள தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தின் முன் காரில் வந்த நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் இறங்கியதாகவும், அங்கு பாதுகாப்புப் படையினரிடம் விசாரணை நடத்தியதில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அல் ஜசீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சண்டையில் அமெரிக்க குடிமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், அமெரிக்க தூதரகம் மற்றும் சவுதி அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!