இலங்கை

கடத்தல் குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது

மாகோல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று காணி உறுதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டை திருடிய சந்தேகத்தின் பேரில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

வியாபாரியைக் கடத்துவதற்கு பிக்குவுக்கு உதவிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எனத் தம்மை அடையாளப்படுத்திய விசேட அதிரடிப்படைத் தலைமையகத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சாரதி ஆகியோரைக் கைது செய்வதற்கான விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டதாக கூறப்படும் வர்த்தகர் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கடத்தலுக்கு திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர் தெமட்டகொட பொலிஸாரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!