மின்கட்டண உயர்வு தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (09) அறிவிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாக, தேசிய அமைப்பு இயக்குனர் நிறுவனம் தனது திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமீபத்தில் சமர்ப்பித்திருந்தது.
எரிபொருள் விலை உயர்வால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்ததே மின்கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக வாய்மொழிக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மின்கட்டண உயர்வு குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
இருப்பினும், தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் இழப்புகளை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்திருந்தது.





