தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் : கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் தி.மு.க!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் நான்காம் திகத வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக மும்முனைப் போட்டியாக இருந்த தேர்தல் களம் இம்முறை நான்கு முனை போட்டியாக இருந்தது பிரபல நடிகரான ஜோசப் விஜய் இம்முறை முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.
விஜயின் அரசியல் பிரவேசம் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியை சீர்குலைத்துள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி குறைந்துள்ளது.
இதற்கிடையே கணிப்புகள் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம் இளைஞர்களின் வாக்கு வங்கியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாதகம் திமுக கட்சிக்கு இருப்பதாக இந்திய அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
234 இடங்களைக் கொண்ட தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் ஆட்சியைப் பிடிக்க, ஒரு கட்சி குறைந்தபட்சம் 118 இடங்களையாவது வெல்ல வேண்டும்.
கடந்த தேர்தலில், திமுக கூட்டணி 159 இடங்களையும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் மட்டுமே வென்றது.
தமிழக மாநிலத் தேர்தலில் கிடைக்கும் வெற்றியானது இந்திய மத்திய அரசின் நிலையையும் பாதிக்கும். இதற்குக் காரணம், தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதுதான்.
இந்தத் தேர்தலின் முடிவு நாட்டை நேரடியாகப் பாதிக்கும். மேலும், சர்ச்சைக்குரிய கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடும், இந்திய-இலங்கை பொருளாதார உறவுகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
மேலும், இலங்கைத் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக புதிய தமிழக ஆட்சியாளர்கள் இந்திய மத்திய அரசின் மீது செலுத்தும் செல்வாக்கும், இந்திய-இலங்கை தூதரக உறவுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.





