ஈரான் போர் – இங்கிலாந்தின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
பிரித்தானியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் பிப்ரவரியில் 3.0% ஆக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய பணவீக்க நிலையானது ஈரான் போர் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
இந்தப் போர், தொடர்ந்தால் பணவீக்கம் மீண்டும் உயர வழிவகுக்கும் என்று இங்கிலாந்து வங்கி கவலை கொண்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, தொழிற்சாலை விலைகளும் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளன.
பெரும்பாலும் எரிபொருளால் ஏற்பட்ட இந்த விலை உயர்வுகள், வட்டி விகிதங்களை உயர்த்தத் தூண்ட வாய்ப்பில்லை என்றும், ஒரு பரந்த பணவீக்கப் பிரச்சனையைத் தூண்டுமா என்பதே முக்கியக் கேள்வியாக உள்ளது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அநேகமாக 2.9% ஆகக் குறையும்,” என்று இங்கிலாந்து துணைத் தலைமைப் பொருளாதார நிபுணர் ரூத் கிரிகோரி மதிப்பிட்டுள்ளார்.





