எரிபொருள் பற்றாக்குறை – முடங்கும் விமானப் பயணங்கள்!
லுஃப்தான்சா நிறுவனம் ஏராளமான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், நைஜீரிய விமான நிறுவனங்கள் விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளன.
ஈரான் போரின் காரணமாக ஜெட் எரிபொருள் விநியோகம் குறைந்து வருவது மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து அரசாங்கங்களும் விமான நிறுவனங்களும் மிகுந்த அவசர எச்சரிக்கைகளை விடுத்து வருகின்ற நிலையில் இவ் எச்சரிக்கை வந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சில வாரங்களுக்குள் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. அத்துடன் எரிபொருள் கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சில வழித்தடங்களைக் குறைத்துள்ளன.
இது, வட அரைக்கோளத்தின் உச்சக்கட்ட கோடை காலத்திற்கு முன்னதாக பயணத்தை சீர்குலைத்து, பல ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நெருக்கடியை விமானத் துறையில் ஏற்படுத்தியுள்ளது.





